சாதாரண குடிமகன் உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா : 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு மேற்கொள்வர் என தகவல்
May 31 2023 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில், சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். ரஷியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சீனா, தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது. அந்தவகையில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோ-16 என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. இதில், முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.