ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு
Mar 28 2023 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஈக்வடாரின் தெற்கு மாகாணங்களில் பல மாதங்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் காயமடைந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.