புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு - வேகமெடுத்துள்ள மீட்புப் பணி
Mar 27 2023 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை தாக்கிய புயலால் பல நகரங்கள் போர் நடந்த இடம் போல் உருக்குலைந்து கிடக்கின்றன. பலியானோர் எண்ணிக்கையும் 26ஆக அதிகரித்துள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக் காற்றால் சாலையில் உள்ள பதாகைகளும் வீட்டின் மேற்கூரைகளும் பறந்தன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மிசிசிப்பி புயல் பாதிப்பு வீடியோக்கள் இதயத்தை நொறுக்கும் வகையில் இருப்பதாக வேதனை தெரிவித்திருந்த ஜோ பைடன், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.