அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி : 26 பேர் பலி
Mar 26 2023 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை புரட்டிப்போட்ட கடும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 121 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் உருக்குலைந்தன.
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வெள்ளியன்று இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. 121 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நொறுங்கின. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ஏராளமான கார்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்தன. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூறைக்காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் குடிநீர் மற்றும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக மிசிசிபி பேரிடர் மேலாண்மை நிர்வாக முகமை தெரிவித்துள்ளது. சூறாவளியால் சீர்குலைந்த மிசிசிபி நகர மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்ள்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி அளித்துத்துள்ளார். பல்வேறு இடங்களில் இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களை தேடும்பணி தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.