துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் மாயம் என தகவல்
Mar 26 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் மாயமாகினர். ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிலவி வருகிறன. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பச்சிளம் குழந்தை உட்பட 34 பேர் மாயமாகினர். கடந்த 2 நாட்களில் துனிசியாவில், 4 அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 67 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.