பிரான்சில் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 457 பேர் கைது

Mar 24 2023 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தும் அதிபர் இமானுவேல் மேக்ரான் நடவடிக்‍கைக்‍கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரண்ட ஏராளமான அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்‍கும், போராட்டக்‍காரர்களுக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு போன்ற சம்பவங்களில் 441 போலீசார் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00