பாகிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு... இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி, படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
Mar 22 2023 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கம், பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பின்னர், 6.5 ரிக்டர் அளவாக பதிவானது. பாகிஸ்தானின் வடமேற்கு திசையில் உள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு குக்கிராமங்களில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நில அதிர்வால் வீடுகள் குலுங்கியதை தொடர்ந்து, மக்கள் வீதியில் தஞ்சமடைந்தனர்.