தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரிக்கை : தலைமை நீதிபதிக்கு பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடிதம்
Mar 21 2023 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாட்டின் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தன்மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால் அடிக்கடி நீதிமன்றத்திற்கு வர வேண்டிய சூழல் உள்ளதாகவும், இந்நிலையில், தனக்கு போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்திற்கு வரும் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.