ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் : பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கைக்கு உதவிக்கரம்
Mar 21 2023 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கைக்கு 24ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கேட்டு, பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளது.