பிரசிலில் அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய 16 வயது சிறுவன் - 3 பேர் பலி; 11 பேர் காயம்
Nov 26 2022 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம நபர் பள்ளிகளுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என்றும், அவனை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவனிடம் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.