சவுதி அரேபியாவில் பெய்த பெருமழை - வெள்ள பாதிப்பில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக ஜெட்டா நிர்வாகம் அறிவிப்பு
Nov 26 2022 11:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியாவில் பெய்த பெருமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஜெட்டா, வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், நகரின் பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடியது. வெள்ள பாதிப்பில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என ஜெட்டா நகர நிர்வாகம் ட்விட்டரில் அறிவித்தது. இதற்கிடையே மழை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.