கிரீஸ் நாட்டுக்கு அருகே அகதிகளின் படக்குள் தண்ணீரில் மூழ்கி விபத்து : 17 பேர் உயிரிழப்பு - 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
Oct 6 2022 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரீஸ் நாட்டுக்கு அருகே ஏஜியன் கடல் பகுதியில் இரண்டு படகுகள் மூழ்கியதில் 17 அகதிகள் உயிரிழந்தனர், 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பசி-பஞ்சம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறிவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டை அடைந்து அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இது போல் நூற்றுக்கணக்கான அகதிகளுடன் இரு வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்ட படகுகள் எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கின. இந்த சம்பவங்களில் 17 அகதிகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இந்நிலையில், பத்திரமாக மீட்கப்பட்ட 80 பேர் கிரீஸ் நாட்டின் கிதீரா தீவில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.