உயிரினங்களில் ஏற்படும் வேதியியல் மாற்றம் மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சிக்காக, நோபல் பரிசு அறிவிப்பு - 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
Oct 5 2022 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டில் வேதியியலுக்கான நோபெல் பரிசு மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
டைனமைட்டைக் கண்டுபிடித்த ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபெல் எழுதிவைத்த உயிலின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும், மனித குலத்திற்கு ஒப்பற்ற சேவையாற்றியவர்களுக்கு ஐந்து பிரிவுகளில் நோபல் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இப்பரிசுகளை ஸ்வீடன் அரசின் கல்விக் கழகம் வழங்கி வருகிறது. கடந்த 1901ம் ஆண்டு முதல் இப்பரிசு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டில் வேதியியலுக்கான பரிசு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் Carolyn R. Bertozzi, டென்மார்க் நாட்டின் Copenhagen பல்கலைக்கழக பேராசிரியர் Morten Meldal மற்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த K. Barry Sharpless ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உடலில் இயல்பாக நடைபெறும் வேதியியல் மாற்றங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நடைபெறும் மாற்றங்கள் மற்றும் மூலக்கூறு ஆராய்ச்சிக்காக இந்த மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.