டிவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர எலான் மஸ்க் முடிவு - ஒரு பங்கிற்கு 54 டாலருக்கு ஒப்பந்தத்தை தொடர உள்ளதாக தகவல்
Oct 5 2022 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிவிட்டர் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர எலான் மஸ்க் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை, ரூபாய் 3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டுவிட்டரின் ஒரு பங்கிற்கு 54.20 டாலருக்கு ஒப்பந்தத்தை தொடர முன்வந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.