இயற்பியலில் குவாண்டம் ஆராய்ச்சியில் சாதனை படைத்ததற்காக நோபல் பரிசு - 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்வீடன் தேர்வுக்குழு அறிவிப்பு
Oct 4 2022 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபெல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
டைனமைட்டைக் கண்டுபிடித்த ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபெல் எழுதிவைத்த உயிலின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும், மனித குலத்திற்கு ஒப்பற்ற சேவையாற்றியவர்களுக்கு ஐந்து பிரிவுகளில் நோபல் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. கடந்த 1901ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு இப்பரிசு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டில் இயற்பியலுக்கான பரிசு Alain Aspect, John F. Clauser, Anton Zeilinger ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. quantum தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்காக இப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்கான நோபெல் பரிசு நியாண்டர்தாலின் டிஎன்ஏ குறித்த ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி Svante Paabo-க்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அமைதி, இலக்கியம் மற்றும் வேதியியலுக்கான நோபெல் பரிசு இன்னும் அறிவிக்கப்படவில்லை.