அஃப்கானிஸ்தானில் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத்தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
Oct 4 2022 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அப்கன் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
அப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டிக் கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.