ஸ்பெயினில் நடைபெற்ற மாபெரும் மனித கோபுரம் அமைக்கும் நிகழ்வு - திரளான போட்டியாளர்கள் பங்கேற்று சாதனை
Oct 3 2022 6:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயினில் நடைபெற்ற மாபெரும் மனிதக் கோபுரம் அமைக்கும் போட்டியில் திரளான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.
மாபெரும் மனிதக் கோபுரம் அமைக்கும் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. கடினமான மற்றும் உயரமான கோபுரம் அமைக்க வேண்டும் என போட்டி விதிமுறை அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களால் முடிந்த அளவுக்கு மாபெரும் மனிதக் கோபுரங்களை அமைத்தனர். குறிப்பாக இளம் வீராங்கனைகள் ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரமான கோபுரத்தை அமைத்து அசத்தினர். இதனை பொதுமக்கள் ஏராளானோர் வியப்புடன் கண்டு ரசித்தனர்.