பாகிஸ்தானில் எண்ணெய் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து : 20 பயணிகள் பரிதாப பலி

Aug 16 2022 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் எண்ணெய் டேங்கர் லாரி மீது பயணிகாள் பேருந்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு, கராச்சி நகருக்கு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் பகுதியில் பேருந்து சென்ற போது, சாலையில் எதிரே பயணித்த எண்ணெய் டேங்கர் லாரி மீது வேகமாக மோதி உள்ளது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இதனிடையே விபத்தில் உயிரிழந்த பெரும்பாலான பயணிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் எரிந்துள்ளதாகவும், இந்த உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் லாகூர்-கராச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00