பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் - இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்‍கிரமசிங்கே அறிவிப்பால் பரபரப்பு

Jul 5 2022 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத்தயார் என்று ரணில் விக்‍கிரமசிங்கே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடும் பொருளாதார பாதிப்பு, ​எரிபொருள் பற்றாக்‍குறை காரணமாக இலங்கை நாடாளுமன்றம் இந்த வாரம் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்‍கப்பட்டு இருந்தது. இதையடுத்து 2வது நாளான இன்று காலை 10 மணிக்‍கு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. சில மணி நேரங்களில் எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் பலரும் அதிபர் கோத்தபய ராஜபக்‍சே பதவி விலக வேண்டும் என்று முழக்‍கமிட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய மக்‍கள் விடுதலை முன்னணி தலைவர் திஸநாயகே பொருளாதாரத்தை 6 மாதத்தில் மீட்க தயார் என்று தெரிவித்து இருந்தார். அப்போது பேசிய பிரதமர் ரணில் விக்‍கிரமசிங்கே, திஸநாயகே தமது பொருளாதார மீட்பு திட்டத்தை அரசிடமோ அல்லது அதிபரிடமோ அளிக்‍க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். பொருளாதார சிக்‍கலில் இருந்து 6 மாதங்களில் திஸநாயகே மீட்டால் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகத்தயார் என்று ரணில் விக்‍கிரமசிங்கே தெரிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் எரிபொருள் கையிருப்பு இல்லாததால், பள்ளிகளை ஒரு வாரம் மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00