உக்ரைனின் பிவோடல் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவிப்பு
Jul 4 2022 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைனின் பிவோடல் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்கி கைப்பற்றி வருகிறது. அந்தவகையில், லுஹான்ஸ்க் மாகாணத்தில் பல நகரங்களை கட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய ராணுவம், தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி முக்கிய நகரமான பிவோடலை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. எனினும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.