பாகிஸ்தானில் மலை பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 20 பேர் பலி
Jul 4 2022 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் மலை பள்ளத்தில் பயணிகள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ராவல்பண்டியில் இருந்து குவெட்டா நகருக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. மலைப்பாதையில் பயணித்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.