சூரியனிலிருந்து வெகு தொலைவில் செல்லும் பூமி : இன்று வழக்கத்தைவிட குளிர் அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தகவல்
Jul 4 2022 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூரியனிலிருந்து வெகு தொலைவில் செல்லும் பூமியால் இன்று வழக்கத்தைவிட குளிர் அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி, ஒரு வருடத்தில் சூரியனில் இருந்து அதன் தொலை தூர நிலைக்கு செல்லும். இது அல்பெலியன் என்று அழைக்கப்படும். பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்று அழைக்கப்படும். அல்பெலியன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6-ந்தேதியும், பெரிஹேலியன் ஜனவரி 2-ந்தேதி தொடங்கும். பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஆகும். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாக மாறும். பின்னர் அது ரெிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். அல்பெலியன் மற்றும் பெரிஹெலியன் இடையே உள்ள வேறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம். பூமி, அல்பெரியன் நிலையில் இருக்கும்போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலை தூர புள்ளியான அல்பெலியன் நிலையை இன்று அடைகிறது. அதன்படி இன்று முதல் பூமி, சூரியனில் இருந்து 15 கோடியே 20 லட்சத்து, 98 ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிலோ மீட்டர் ஆகும். சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.