சீனாவின் ஷாங்காய் நகரில் 5 நாட்களுக்‍குப் பின் மீண்டும் தினசரி பாதிப்பு கண்டுபிடிப்பு

May 20 2022 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஷாங்காய் நகரில் ஐந்து நாட்களுக்‍குப் பின் முதன் முதலாக மீண்டும் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு இல்லை என்ற இலக்‍கை நோக்‍கி அந்நாட்டு அரசு பயணப்பட்ட போது, கடந்த சில மாதங்களுக்‍கு முன் ஒமைக்‍ரான் வகை கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் ஜிலின் மாகாணம், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரில் தினமும் 30 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் கடந்த பல வாரங்களுக்‍கு முன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், தினசரி கொ​ரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்வதற்கு முன் ஊரடங்கு விலக்‍கிக்‍ கொள்ளப்பட மாட்டாது என சுகாதாரத் துறையினர் அறிவித்துவிட்டனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்புக்‍கல் இல்லாமல் இருந்தது. ஆனால், 5 நாட்களுக்‍குப் பின் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று 637 பேருக்‍கும், இன்று 770 பேருக்‍கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00