பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக இந்தோனேசியா அறிவிப்பு
May 20 2022 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா அறிவித்துள்ளார். உலகில் அதிகளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பாமாயில் விலை 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததால் உள்நாட்டில் பாமாயில் தாரளமாக கிடைக்கவும், விலையை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக, இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.