ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி
May 20 2022 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டன் சென்று திரும்பிய 30 வயதுடைய நபர் ஒருவர் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகருக்கு வந்த போது, அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரைத் தனிமைப்படுத்திய மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர். இதே போல் சிட்னி நகரில் 40 வயதுடைய நபர் ஒருவருக்கும் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு நீடித்து வருவதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.