சீனத் தலைநகர் பிஜிங்கில் கொரோனா பரவலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
May 19 2022 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனத் தலைநகர் பிஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் வெளியில் நடமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. பாங்ஷான் மாவட்டத்தில் பேருந்து, மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாங்ஷான் மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.