உக்ரைன் தலைநகர் கிய்வில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு - 3 மாதங்களுக்குப் பின் அமெரிக்க தூதரகம் பணிகளை தொடங்கியது
May 19 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் தலைநகர் கிய்வில் 3 மாதங்களுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த ஃபிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதற்கு பத்து நாட்கள் முன்பாகவே அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றியவர்கள் தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கிய்வ் நகரில் தாக்குதல் நடத்திய ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஏற்கெனவே பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் தங்கள் தூதரகங்களைத் திறந்துள்ளன.