இந்தோனேசிய அரசு பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் தடைக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள்
May 18 2022 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசிய அரசு பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
உலகிலேயே அதிக அளவில் பால்ம் ஆயில் உற்பத்தி செய்யும் இந்தோனேசியாவில் விலையேற்றம் காரணமாக கடந்த 28-ம் தேதி முதல் பால்ம் ஆயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இது உலகில் பல்வேறு நாடுகளில் பால்ம் ஆயில் விலை உயர்வுக்கு வித்திட்டதுடன், இந்தோனேசிய விவசாயிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், ஏற்றுமதிக்கான தடையை அகற்றக்கோரி நாட்டின் பல நகரங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அண்டை நாடான மலேசியாவில் பனம்பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால், இந்தோனேசியாவில் பனம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சோகத்தில் இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் புகார் தெரிவித்தனர்.