இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு ஆதரவு அளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானம் - அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு

May 17 2022 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு ஆதரவு அளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்‍கடியில் சிக்‍கிதவிக்‍கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்‍சே பதவி விலகக்கோரி பொதுமக்‍கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, புதிய பிரதமராக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது அரசுக்‍கு ஆதரவு தருமாறு பல்வேறு கட்சித்தலைவர்களுடன் கோரிக்‍கை விடுத்தார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. இந்தக்‍கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஆலோசனை நடத்தினர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினர். ரணில் விக்ரமசிங்கவிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்‍கு ​அதிக அதிகாரம் அளிப்பது, அதிபரின் அதிகாரங்களைக் குறைப்பது குறித்த மசோதாவை நிறைவேற்றுவது குறித்து எதிர்க்‍கட்சிகளுடன் ரணில் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00