ரஷ்ய படையினர் தாக்குதல் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை
May 16 2022 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்ய படையின் தாக்குதலால் உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. கருங்கடல் துறைமுகங்களை ரஷியா முற்றுகையிடுவது உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைநகர் கீவை கைப்பற்ற முடியாமல் திணறும் ரஷ்ய படையினர், டான்பாஸ் மீது பெரும் தாக்குதலை நடத்தி வருவதாக கவலை தெரிவித்தார்.