டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு - போலி கணக்குகள் அதிகமாக இருப்பதாக கூறி எலான் மஸ்க் அறிவிப்பு
May 13 2022 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை ஒரு பங்கு 54 டாலர் என்ற வீதத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதன் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்த டிவிட்டர் தனிநபர் நிறுவனமாக மாறியது. இன்னும் ஓரிரு வாரத்தில் டிவிட்டர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க் கைகளுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், டிவிட்டர் தளத்திலும், நிறுவனத்திலும், பல அதிரடி மாற்றங்களும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதால் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.