ஆப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டுவெடிப்பு : 4 பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்பு
Jan 23 2022 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அப்கானிஸ்தானில் மினி பேருந்து ஒன்றில் குண்டுவெடித்ததில் 4 பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு அப்கானிஸ்தானின் HERAT நகரில் மினி பேருந்தில் பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் குறைந்தது ஏழு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மினி பேருந்தில் எரிபொருள் நிரப்பக்கூடிய பகுதின் அருகே வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த ஏழு பேரில் நான்கு பேர் பெண்கள் ஆவர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் HERAT நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.