உலகெங்கிலும் கிறிஸ்துமஸை வரவேற்க களைகட்டும் கொண்டாட்டங்கள் - பெத்லகேம் நகரில் ஒளிரூட்டப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்
Dec 5 2021 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகெங்கிலும் கிறிஸ்துமஸை வரவேற்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், Bethlehem நகரில் வண்ண விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டது.
ஏசு பிறந்த தினம் இம்மாதம் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வரவேற்க உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் தயாராகி வருகிறார்கள். பாரம்பரியக் கட்டடங்களும், தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மரங்கள் ஒளிரூட்டப்பட்டன. இந்த நிலையில், ஏசு பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. இந்த ஆண்டும், புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த அச்சத்தையும் கடந்து, பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டது. எனினும் வெளிநாட்டுப் பயணிகள் பெத்லகேம் நகருக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.