கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவாக பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு : பிடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்காக வைப்பு
Dec 2 2021 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ஹவானாவில் பிரம்மாண்ட அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பிரம்மாண்ட அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. ஹவானாவில் அமந்துள்ளா இந்த அருங்காட்சியகத்தில் பிடல் காஸ்ட்ரோ அணிந்திருந்த ராணுவ சீருடை, அவர் பயன்படுத்திய ஜீப் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், சீன அதிபர் ஜின் பிங் பரிசளித்த பிடல் காஸ்ட்ரோவின் மார்பளவு சிலை, புகைப்படங்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், இங்கு பிரம்மாண்ட அரங்கம், நூலகம் மற்றும் புத்தகக்கடை போன்றவையும் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய அருங்காட்சியகத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்து வருகின்றனர்.