மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா : அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் என நிபுணர்கள் கருத்து
Oct 19 2021 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா அடுத்தடுத்து 2 புதிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாகவும், வட கொரியாவின் இந்த சோதனைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்து வரும் நிலையில், வடகொரியாவை தென்கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதேநேரம், வடகொரியா புதிதாக 2 புதிய ஏவுகணைகளை சோதித்துள்ளது. இந்த சோதனைகள் அமைதி பேச்சுவார்ததைக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி உள்ளதாகவும், வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாகவும், வடகொரியாவின் இந்த நடவடிக்கையை, அமெரிக்காவுடன் இணைந்து தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் கூறியுள்ளார். வட கொரியா அண்மை காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாகவும், இது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.