கவலை மற்றும் மன நல பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை : ஸ்பெயினில் புதிய நடைமுறை
Oct 19 2021 10:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என, வினோத வாசகத்துடன் வரவேற்கிறது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள அந்த அழுகை அறை. மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில், இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறையில், உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.
கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களும், இந்த அறைக்கு வந்து அழுது, ஆறுதல் தேடுகின்றனர். இதனால் இந்த அழுகை அறைக்கு, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.