ஹைதியில் அமெரிக்க கிறிஸ்துவ மிஷினரியைச் சேர்ந்த 17 பேர் கடத்தல் -- அனைவரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசு கோரிக்கை
Oct 18 2021 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க கிறிஸ்துவ மிஷினரியைச் சேர்ந்த 17 பேர் ஹைதியில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க 75 கோடி ரூபாய் கேட்டு, கடத்தல் கும்பல் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் ஓகையோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறிஸ்துவ மிஷனரி அமைப்பு ஒன்று, பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஹைதி நாட்டு தலைநகர் Port-au-Prince-ல் ஆதரவற்றோருக்கான சேவை பணிகளில் ஈடுபட சென்றனர். அவர்களில் 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 17 பேரை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. 75 கோடி ரூபாய் கேட்டு, கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி நாட்டில் கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.