விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா தீவிரம் - 2-ம் கட்டப்பணிகளை மேற்கொள்ள 3 வீரர்கள் விண்வெளிக்கு பயணம்
Oct 16 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பெண் உட்பட 3 விண்வெளி வீரர்களை, விண்வெளிக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது.
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. 'தியான்ஹே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்துக்கான மைய பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 'தியான்ஹே' விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூன் மாதம் 3 வீரர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் 90 நாட்கள் பணிக்குப் பின்னர் பூமிக்கு திரும்பினர்.
இந்நிலையில், அடுத்தக்கட்டப் பணிக்காக மீண்டும் 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது. Jiuquan Satellite Launch Center ஏவுதளத்தில் இருந்து 'Shenzhou-13' என்ற விண்கலம், Long March-2F Y-13 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்கு விண்வெளியில் மூன்று வீரர்களும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்கள் என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.