லெபனான் நாட்டில் வெடி விபத்து விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் - போலீசார் துப்பாக்‍கி சூட்டில் 6 பேர் பலி

Oct 16 2021 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

லெபனான் நாட்டில் நேரிட்ட வெடி விபத்து விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்‍கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆண்டு நேரிட்ட வெடி விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் விபத்து நேரிட்டதாக அதன் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிவிபத்தில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெடிவிபத்து தொடர்பாக நீதிபதி தாரேக் தலைமையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் நீதிபதி, அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என கூறி, பெய்ரூட்டில் பொதுமக்‍கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது போலீசார் நடத்திய துப்பாக்‍கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00