அதிர்வலைகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் : உலகத் தலைவர்கள் மீது இங்கிலாந்து ராணி எலிசபெத் அதிருப்தி
Oct 16 2021 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவநிலை மாற்றம் குறித்து உலகத்தலைவர்கள் பேச மட்டுமே செய்கிறார்களே தவிர அதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரிட்டன் ராணி எலிசபெத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் வரும் 31-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்ளவுள்ளார். இதனிடையே, வேல்ஸ் சட்டப்பேரவையை தொடங்கி வைத்து பேசிய எலிசபெத் ராணி, பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில், யாரெல்லாம் பங்கேற்கவில்லை என்பது தமக்கு தெரியும் எனவும், பருவ நிலை மாற்றம் குறித்து பேச மட்டுமே செய்யும் உலகத்தலைவர்கள், அதற்காக சிறிய நடவடிக்கை கூட எடுப்பதில்லை என அதிருப்தி தெரிவித்தார். தாங்கள் செய்ய விரும்பாத விஷயம் குறித்து, அவர்கள் நிறைய பேசுவதை பார்க்கும்போது எரிச்சல் வருவதாகவும், ராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.