அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களுக்கு நூதன முறையில் அஞ்சலி - 3,50,000 செயற்கை நகங்களால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பம்
Oct 15 2021 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், செயற்கை நகங்களால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 56 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நியூயார்க் நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் acrylic நகங்களை பயன்படுத்தி, 18 அடி உயரத்தில் பிரமாண்ட ராட்சத சிற்பத்தை Michelle Abrokwa என்பவர் உருவாக்கியுள்ளார். டைம் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத சிற்பத்தை, அந்நாட்டு மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், பிரமாண்ட சிற்பத்தை செல்ஃபோன்களில் படம் பிடித்தும் உற்சாகமடைந்து வருகின்றனர்.