வடகொரியாவில் தேசியக் கொடியை ஏந்தியபடி சாகசம் செய்த பாராசூட் வீரர் : ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்த அதிபர் கிம் ஜாங் உன்
Oct 14 2021 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் பாராசூட் வீரர் ஒருவரின் சாகசத்தை அதிபர் கிம் ஜாங் உன் உட்பட பலரும் பார்த்து வியந்தனர்.
வடகொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்படும் நிலையில், தலைநகர் பியாங்யாங்கில் ஆயுதக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவையும், தென்கொரியாவையும் எதிர்கொள்ள பலமான ராணுவ கட்டமைப்பு அவசியமென தெரிவித்தார். இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில், பாராசூட் வீரர் ஒருவர், வட கொரிய கொடியை ஏந்தியபடி விண்ணில் செய்த சாகசம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அவரது சாகசத்தை அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்தனர்.