பிரான்சில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் விவசாயிகள் அச்சம் - கோதுமையை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணிகள் தீவிரம்
Jul 23 2021 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்சில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாட்டின் வடபகுதியில் உள்ள விவசாயிகள் கோதுமை அறுவடையை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக மழை பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரான்சிலும் அடுத்த சில நாட்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடபகுதியில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருந்தாலும், மழை பாதிப்பால் அதிக இழப்புக்கள் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும் அதிக மழை பெய்தால், கோதுமையின் தரமும் பாதிப்படையும் என கருதப்படுகிறது. இதனால், முன்கூட்டியே கோதுமையை அறுவடை செய்ய விவசாயிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் அறுவடையை முடிக்க அனைத்து விவசாயிகளும் திட்டமிட்டுள்ளனர்.