துருக்கியில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்‍கு - பொதுமக்‍கள் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம்

Jul 23 2021 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்‍கள் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து சீனாவில் பலத்த மழை பதிவான நிலையில், துருக்‍கியிலும் கனமழை பெய்துவருகிறது. நாட்டின் வடகிழக்‍குப் பகுதியின் ஆரவி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்‍கி ஒருவர் மாயமானதாக அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், 450க்‍கும் மேற்பட்ட பொதுமக்‍கள் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கருங்கடல் பகுதியில் உள்ள Rize மாகாணத்தில் பெய்த அதிக பாதிப்புக்‍கள் ஏற்பட்ட நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்‍கி 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டது. இதனால் தற்போது அனைத்து முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00