திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் : பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்
Jul 23 2021 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் அதிபர் ஜி ஜின்பிங், அண்மையில் தொடங்கப்பட்ட புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
திபெத் நாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, எல்லை நகரங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், திபெத் நாட்டில் புல்லட் ரெயில் சேவை நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் விதத்தில் சுமார் 435 கிமீ தொலைவில் இந்த புல்லட் ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ள யிங்சி பகுதி, இந்திய எல்லை மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள நகரம் ஆகும். இந்தியா -சீனா இடையில் ஏற்கனவே சில பிரச்சனைகள் உள்ளதால், இந்த புல்லட் ரெயில் சேவையை சீனா தொடங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், திபெத்திற்கு சீன அதிபர் அதிபர் ஜி ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திபெத்தில் பல்வேறு நல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் பயணம் மேற்கொண்ட சீன அதிபருக்கு, விமான நிலையத்தில் திபெத் மக்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அதிபர் ஜி ஜின்பிங், அண்மையில் தொடங்கப்பட்ட புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டு, ஆய்வு மேற்கொண்டார்.