சீனாவில் ஒரு வாரமாகத் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழை - மூன்று நாட்களில் 62 செ.மீ. மழை பதிவானதாக தகவல்
Jul 22 2021 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33ஐக் கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.