உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
Jul 22 2021 6:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் திரு.ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜோ பைடன், மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதால், கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயாளிகள் இறப்பு, 90 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதேசமயம், கொரோனாவின் உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதனால், தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என தெரிவித்த அவர், மக்கள் எச்சரிக்கை உணர்வுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.