நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் - 42 நாட்களுக்குப் பின் 100 பேரும் மீட்கப்பட்டதாக தகவல்
Jul 21 2021 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் பலமாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் 100 பேரை மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Zamfara மாநிலத்தின் மனாவா கிராமத்திலிருந்து இளம்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 8ம் தேதி கடத்தப்பட்டனர். தீவிரவாத அமைப்புக்களுக்காக ஆள் சேர்க்கும் கூட்டத்தினர் அவர்களைக் கடத்திய நிலையில், தற்போது அவர்களை மீட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். கடத்தப்பட்டவர்களின் 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மீதமிருந்த அனைவரும், எந்தப் பிணையும் இல்லாமல் மீட்கப்பட்டிருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது. மீட்கப்பட்ட அனைவருக்கும் உடற்பரிசோதனை செய்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். நைஜீரியாவில் இது போல் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கும் ஒரு துயரச் சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.