சீனாவில் பலத்த சூறாவளிக் காற்றில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன - இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
May 15 2021 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வுகான் மற்றம் ஜியாங்ஷியில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மத்திய சீனாவின் வுகான் நகரிலும் மேற்கு மாகாணமான ஜியாங்ஷியிலும் நேற்றிரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்துவிழுந்தன. இதே போல் பிற சொத்துக்களும் சேதமடைந்தன. இதே போல் மரங்களும், மின் கம்பங்களும் பல பகுதிகளில் விழுந்துகிடந்தன. வுகான் நகரின் ஒரு பகுதியில் வீடுகள் இடிந்துவிழுந்து போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சூறாவளிக்காற்றில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.