நேபாள பிரதமராக சர்மா ஒலி மீண்டும் பதவியேற்பு - 30 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் உத்தரவு
May 15 2021 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாள பிரதமராக K.P.சர்மா ஒலி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சர்மா ஒலி அரக்கு அளித்து வந்த ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா திரும்பப் பெற்றதையடுத்து, சர்மா ஒலி பெரும்பான்மை இழந்தார். இதையடுத்து அவர் பதவி விலகினார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவுக்குள் புதிய அரசை அமைக்குமாறு எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிபர் வித்யாதேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், குறித்த நேரத்துக்குள் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தவறி விட்டன.
இந்தச் சூழலில், சர்மா ஒலியை மீண்டும் பிரதமராக அதிபர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக நேபாளத்தில் 43-வது பிரதமராக சர்மா ஒலி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அவரது அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 30 நாட்களுக்குள் சர்மா ஒலி தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என அதிபர் அறிவித்துள்ளார்.